You are here
Disaster Alerts 24/05/2021
State:
Tamil Nadu
Message:
கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள சூறாவளி புயல் யாஸ் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அந்தமானுக்கு 630 கி.மீ வடக்கு வடமேற்கு திசையிலும், பாரதீப், ஒடிசா - 520 கி.மீ தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும், திகா, மேற்குவங்காளத்துக்கு 610 கி.மீ தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது.இது மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறி அதற்கடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர சூறாவளி புயலாக ஒடிசாவிற்கும் , மேற்கு வங்கத்திற்கும் இடையே வரும் 26 ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்று எச்சரிக்கை
24.5.2021 - 25.5.2021 - சுழல் காற்று மணிக்கு 65-75 கி.மீ அதிகபட்சமாக 85 கி .மீ வேகத்தில் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடல், ஆந்திரா, ஒடிஷா பகுதியில் வீசக்கூடும்
24.5.2021 -27.5.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழக கடற்கரை மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் வீசக்கூடும்
27.5.2021 - 28.5.2021 : சுழற்காற்று மணிக்கு மணிக்கு 40-50 கி.மீ அதிகபட்சமாக 60 கி,.மீ வேகத்தில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும்
பேரலை எச்சரிக்கை
தென்தமிழகத்தில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை பேரலைகள் 10 அடி முதல் 11 அடி வரை 24.5.2021 மாலை 5.30 மணி முதல் 26.5.2021 இரவு 11.30 வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 42-87 செ .மீ வேகத்தில் காணப்படும்
எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type:
State id:
2
Disaster Id:
7
Message discription:
கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள சூறாவளி புயல் யாஸ் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அந்தமானுக்கு 630 கி.மீ வடக்கு வடமேற்கு திசையிலும், பாரதீப், ஒடிசா - 520 கி.மீ தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும், திகா, மேற்குவங்காளத்துக்கு 610 கி.மீ தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது.இது மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறி அதற்கடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர சூறாவளி புயலாக ஒடிசாவிற்கும் , மேற்கு வங்கத்திற்கும் இடையே வரும் 26 ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்று எச்சரிக்கை
24.5.2021 - 25.5.2021 - சுழல் காற்று மணிக்கு 65-75 கி.மீ அதிகபட்சமாக 85 கி .மீ வேகத்தில் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடல், ஆந்திரா, ஒடிஷா பகுதியில் வீசக்கூடும்
24.5.2021 -27.5.2021 : பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழக கடற்கரை மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் வீசக்கூடும்
27.5.2021 - 28.5.2021 : சுழற்காற்று மணிக்கு மணிக்கு 40-50 கி.மீ அதிகபட்சமாக 60 கி,.மீ வேகத்தில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும்
பேரலை எச்சரிக்கை
தென்தமிழகத்தில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை பேரலைகள் 10 அடி முதல் 11 அடி வரை 24.5.2021 மாலை 5.30 மணி முதல் 26.5.2021 இரவு 11.30 வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 42-87 செ .மீ வேகத்தில் காணப்படும்
எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Start Date & End Date:
Monday, May 24, 2021 to Wednesday, May 26, 2021