You are here
Disaster Alerts 24/11/2020
State:
Tamil Nadu
Message:
நிவார் புயல் குறித்த எச்சரிக்கை - 24.11.2020 மாலை 6.00 மணி நிலவரம் - source INCOIS-IMD joint cyclone bulletin)
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள நிவார் சூறாவளி புயல் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து தற்போதைய நிலவரப்படி latitude 10.0°N and longitude 82.6°E, ல் புதுச்சேரிக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் 370 கி.மீ தூரத்திலும், சென்னைக்கு 420 கி.மீ தொலைவில் தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து தீவிர சூறாவளி புயலாகவும் அதற்கடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர சூறாவளிபுயலாகவும் மாறி வரும் 25 ஆம் தேதி மாலை காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே புதுச்சேரிக்கு அருகே பலத்த சூறாவளி காற்றுடன் மணிக்கு 120-130 கி.மீ அதிகபட்சமாக 145 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பேரலைகள் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்
பேரலை எச்சரிக்கை :
வட தமிழ்நாடு : பேரலைகள் 25.11.2020 இரவு 11.30 மணி வரை 12 முதல் 16 அடி(கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 43-85 செ .மீ வேகத்தில் காணப்படும்
தென்தமிழ்நாடு : பேரலைகள் 25.11.2020 இரவு 11.30 மணி வரை 5 முதல் 9 அடி(குளச்சல் முதல் தனுசுகோடி வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 43-85 செ .மீ வேகத்தில் காணப்படும்
பலத்த காற்று எச்சரிக்கை
24.11.2020: மோசமான வானிலையுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக, புதுச்சேரி கடலோர பகுதிகளில் வீசக்கூடும்
25.11.2020 - மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 100-110 கி.மீ அதிகபட்சமாக 120 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல், தமிழகம், புதுச்சேரி கடற்கரை பகுதியில் வீசக்கூடும்
கனமழை
நிவார் புயலின் சுற்றளவு அதிகம் என்பதால் தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்கள் முழுவதும் நவம்பர் 24, 25,26,27 தேதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பொழியும்.
கடல் பெருக்கம்
கடல் பெருக்கம் கடல் கரைப்பகுதிகளில் 1 மீ உயரத்திற்கு காணப்படும். இதனால் தாழ்வான கடற்கரை பகுதிகளில் கடல் தண்ணீர் உட்புக கூடும்.
மீனவர்கள் மற்றும் கடலோர மக்களுக்கான எச்சரிக்கை :
மீன்பிடித்தல் முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது வரும் 25 ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாமெனவும், தாழ்வாக பகுதியில் உள்ளவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், கடற்கரைக்கு அருகில் செல்லாமலும், படகுகளை பாதுகாப்பான முறையில் வைக்கவும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்
Disaster Type:
State id:
2
Disaster Id:
11
Message discription:
நிவார் புயல் குறித்த எச்சரிக்கை - 24.11.2020 மாலை 6.00 மணி நிலவரம் - source INCOIS-IMD joint cyclone bulletin)
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள நிவார் சூறாவளி புயல் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து தற்போதைய நிலவரப்படி latitude 10.0°N and longitude 82.6°E, ல் புதுச்சேரிக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் 370 கி.மீ தூரத்திலும், சென்னைக்கு 420 கி.மீ தொலைவில் தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து தீவிர சூறாவளி புயலாகவும் அதற்கடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர சூறாவளிபுயலாகவும் மாறி வரும் 25 ஆம் தேதி மாலை காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே புதுச்சேரிக்கு அருகே பலத்த சூறாவளி காற்றுடன் மணிக்கு 120-130 கி.மீ அதிகபட்சமாக 145 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பேரலைகள் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்
பேரலை எச்சரிக்கை :
வட தமிழ்நாடு : பேரலைகள் 25.11.2020 இரவு 11.30 மணி வரை 12 முதல் 16 அடி(கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 43-85 செ .மீ வேகத்தில் காணப்படும்
தென்தமிழ்நாடு : பேரலைகள் 25.11.2020 இரவு 11.30 மணி வரை 5 முதல் 9 அடி(குளச்சல் முதல் தனுசுகோடி வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 43-85 செ .மீ வேகத்தில் காணப்படும்
பலத்த காற்று எச்சரிக்கை
24.11.2020: மோசமான வானிலையுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக, புதுச்சேரி கடலோர பகுதிகளில் வீசக்கூடும்
25.11.2020 - மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 100-110 கி.மீ அதிகபட்சமாக 120 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல், தமிழகம், புதுச்சேரி கடற்கரை பகுதியில் வீசக்கூடும்
கனமழை
நிவார் புயலின் சுற்றளவு அதிகம் என்பதால் தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்கள் முழுவதும் நவம்பர் 24, 25,26,27 தேதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பொழியும்.
கடல் பெருக்கம்
கடல் பெருக்கம் கடல் கரைப்பகுதிகளில் 1 மீ உயரத்திற்கு காணப்படும். இதனால் தாழ்வான கடற்கரை பகுதிகளில் கடல் தண்ணீர் உட்புக கூடும்.
மீனவர்கள் மற்றும் கடலோர மக்களுக்கான எச்சரிக்கை :
மீன்பிடித்தல் முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது வரும் 25 ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாமெனவும், தாழ்வாக பகுதியில் உள்ளவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், கடற்கரைக்கு அருகில் செல்லாமலும், படகுகளை பாதுகாப்பான முறையில் வைக்கவும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்
Start Date & End Date:
Tuesday, November 24, 2020 to Wednesday, November 25, 2020