You are here
Disaster Alerts 24/11/2020
State:
Tamil Nadu
Message:
நிவார் புயல் குறித்த எச்சரிக்கை : 24.11.2020 காலை 10.30 மணி நிலவரம் (source INCOIS-IMD joint cyclone bulletin )
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள நிவார் புயல், சூறாவளி புயலாக வலுப்பெற்று மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து தற்போதைய நிலவரப்படி latitude 10.0°N and longitude 83.0°E, ல் புதுச்சேரிக்கு 410 கி.மீ மற்றும் சென்னைக்கு 450 கி.மீ தொலைவில் தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் அடுத்த 12 மணி நேரத்தில் நகர்ந்து வலுவடைந்து தீவிர சூறாவளி புயலாக மாறி வரும் 25 ஆம் தேதி மாலை காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பேரலைகள் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்
பேரலை எச்சரிக்கை :
வட தமிழ்நாடு (கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை) : பேரலைகள் 25.11.2020 இரவு 11.30 மணி வரை 12 முதல் 15 அடிஎழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 43-85 செ .மீ வேகத்தில் காணப்படும்
தென்தமிழ்நாடு (குளச்சல் முதல் தனுசுகோடி வரை) : பேரலைகள் 25.11.2020 இரவு 11.30 மணி வரை 5 முதல் 9 அடி எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 43-85 செ .மீ வேகத்தில் காணப்படும்
பலத்த காற்று எச்சரிக்கை:
உள் கடல் பகுதியில்
மோசமான வானிலையுடன் கூடிய சுழல் காற்று மணிக்கு 65-75 கி.மீ அதிகபட்சமாக 85 கி.மீ வேகத்தில் தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். இது மெதுவாக அதிகரித்து நவம்பர் 25 மற்றும் அதற்கடுத்த 18 மணி நேரத்திற்கு 100-110 கி.மீ முதல் அதிகபட்சமாக 120 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
கடற்கரை பகுதியில்
24.11.2020 : மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 - 40 கி.மீ அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் வீசக்கூடும். இது மெதுவாக அதிகரித்து 100 -110 கி.மீ அதிகபட்சமாக 120 கி.மீ வேகத்தில் வட தமிழ்நாடு கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், காரைக்கால் , மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும்,
80 - 90 கி.மீ அதிகபட்சமாக 100 கி.மீ வேகத்தில் காஞ்சிபுரம் , சென்னை , திருவள்ளூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் நவம்பர் 25 ஆம் தேதி காலையிலிருந்து வீசக்கூடும்
கடல் பெருக்கம்
கடல் பெருக்கம் கடல் கரைப்பகுதிகளில் 1 மீ உயரத்திற்கு காணப்படும். இதனால் தாழ்வான கடற்கரை பகுதிகளில் கடல் தண்ணீர் உட்புக கூடும்.
கனமழை எச்சரிக்கை
நிவார் புயலின் சுற்றளவு அதிகம் என்பதால் தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்கள் முழுவதும் நவம்பர் 24, 25,26,27 தேதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பொழியும்.
மீனவர்கள் மற்றும் கடலோர மக்களுக்கான எச்சரிக்கை :
மீன்பிடித்தல் முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது வரும் 25 ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாமெனவும், தாழ்வாக உள்ள பகுதியில் உள்ளவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், கடற்கரைக்கு அருகில் செல்லாமலும், படகுகளை பாதுகாப்பான முறையில் வைக்கவும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்
Disaster Type:
State id:
2
Disaster Id:
11
Message discription:
நிவார் புயல் குறித்த எச்சரிக்கை : 24.11.2020 காலை 10.30 மணி நிலவரம் (source INCOIS-IMD joint cyclone bulletin )
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள நிவார் புயல், சூறாவளி புயலாக வலுப்பெற்று மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து தற்போதைய நிலவரப்படி latitude 10.0°N and longitude 83.0°E, ல் புதுச்சேரிக்கு 410 கி.மீ மற்றும் சென்னைக்கு 450 கி.மீ தொலைவில் தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் அடுத்த 12 மணி நேரத்தில் நகர்ந்து வலுவடைந்து தீவிர சூறாவளி புயலாக மாறி வரும் 25 ஆம் தேதி மாலை காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பேரலைகள் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்
பேரலை எச்சரிக்கை :
வட தமிழ்நாடு (கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை) : பேரலைகள் 25.11.2020 இரவு 11.30 மணி வரை 12 முதல் 15 அடிஎழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 43-85 செ .மீ வேகத்தில் காணப்படும்
தென்தமிழ்நாடு (குளச்சல் முதல் தனுசுகோடி வரை) : பேரலைகள் 25.11.2020 இரவு 11.30 மணி வரை 5 முதல் 9 அடி எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 43-85 செ .மீ வேகத்தில் காணப்படும்
பலத்த காற்று எச்சரிக்கை:
உள் கடல் பகுதியில்
மோசமான வானிலையுடன் கூடிய சுழல் காற்று மணிக்கு 65-75 கி.மீ அதிகபட்சமாக 85 கி.மீ வேகத்தில் தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். இது மெதுவாக அதிகரித்து நவம்பர் 25 மற்றும் அதற்கடுத்த 18 மணி நேரத்திற்கு 100-110 கி.மீ முதல் அதிகபட்சமாக 120 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
கடற்கரை பகுதியில்
24.11.2020 : மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 - 40 கி.மீ அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் வீசக்கூடும். இது மெதுவாக அதிகரித்து 100 -110 கி.மீ அதிகபட்சமாக 120 கி.மீ வேகத்தில் வட தமிழ்நாடு கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், காரைக்கால் , மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும்,
80 - 90 கி.மீ அதிகபட்சமாக 100 கி.மீ வேகத்தில் காஞ்சிபுரம் , சென்னை , திருவள்ளூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் நவம்பர் 25 ஆம் தேதி காலையிலிருந்து வீசக்கூடும்
கடல் பெருக்கம்
கடல் பெருக்கம் கடல் கரைப்பகுதிகளில் 1 மீ உயரத்திற்கு காணப்படும். இதனால் தாழ்வான கடற்கரை பகுதிகளில் கடல் தண்ணீர் உட்புக கூடும்.
கனமழை எச்சரிக்கை
நிவார் புயலின் சுற்றளவு அதிகம் என்பதால் தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்கள் முழுவதும் நவம்பர் 24, 25,26,27 தேதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பொழியும்.
மீனவர்கள் மற்றும் கடலோர மக்களுக்கான எச்சரிக்கை :
மீன்பிடித்தல் முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது வரும் 25 ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாமெனவும், தாழ்வாக உள்ள பகுதியில் உள்ளவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், கடற்கரைக்கு அருகில் செல்லாமலும், படகுகளை பாதுகாப்பான முறையில் வைக்கவும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்
Start Date & End Date:
Tuesday, November 24, 2020 to Wednesday, November 25, 2020